logo

g

Thursday, February 24, 2011

தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!!

நீ இல்லாத இரவுகளை விட கொடுமையானது
நீ இல்லாத விடியல்கள் - விழிக்குமுன்
நினைவுக்குள் இம்சிக்கிறது விழித்தால் நீ
இருக்க போவதில்லை என்ற நிஜம்

நான் என்னை பார்க்கும் கண்ணாடி முதல்
நீயின்றி எனை பார்க்கும் உலகம் வரை
அத்தனையும் உன்னயே பிரதிபலிக்க‌
ஒழிய இடமில்லாமல் ஒடும் அகதியானேன்
 
ஒர் கல்ப கோடி வருடம் வாழ‌  வகுத்து வைத்த
ஆசைகள் அனைத்தும் நினனைவோடு துரத்த‌
வெள்ளை நான் உடுத்தாத போதும்
வெறுமை எனை உடுத்த‌
பார்த்திபனாய் செய‌லற்று  நிற்கிறேன் மன‌ குருஷேத்திரத்தில்



தலையனையின் அரவணைப்பும்
உன் ஆடைகளின் ஸ்பரிசமும்
உயிருக்குள் விரிசலாய் விழ‌
உன் புகை படமுன் கண்ணீரால் இறுகுகிறேன்






இந்த கண்ணீரில் கரைவது என் காமமா? சோகமா?
இந்த அழுகை உன் மரணம் குறித்தா? என் எதிர்காலம் குறித்தா?
தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!
                                             - சத்யா
Enhanced by Zemanta

Friday, February 18, 2011

அறிவாளியாக அறியப்பட்டபின் அத்தனைக்கும் அனுமதி மறுக்கபட்டது

















அறிவாளியாக அறியப்பட்டபின் அத்தனைக்கும்
அனுமதி மறுக்கபட்டது அழுகை உள்பட‌

வியாபார சந்தையில் இடம் கேட்கையில்  -
சொல்வதை சலிக்காமல் செய்பவர்களே போதும்
யோசிப்பவர்கள் தேவையா என
யோசித்து சொல்வதாக ஒரங்கட்டபட்டேன்

குரோதங்கள் வெளிபட்டுவிடுமோ என்ற‌ (சிலரது) பயத்தினாலும்
சுயநலத்தை மறைக்கமுடியாதோ என்ற‌ (பலரது) பதட்ட‌த்தினாலும்
உறவு சந்தையிலும் ஒதுக்கப்பட்டேன்
 
குடும்ப வ‌ழக்கங்களை அப்படியே
பின்நடத்தும் தலையாட்டிக‌ளே போதும்
சிந்தனைவாதிகளுக்கு இடமில்லை என
திருமண சந்தையிலும் நிராகரிக்க பட்டேன்
 
எப்படியாவது எதிலாவது இணைத்துக் கொள்ள
மனு கோரிய‌  போதெல்லாம்
ஆட்டு மந்தையில் ஓநாய்க்கு இடமேது என பதில் வந்தது
மனிதர் என்பதை மறந்து என்னை ஓநாயாக்குவதற்காக‌
அவர்களும்  ஆடாகி போயிருந்தார்கள்
 
ப‌குத்தறிவை வைத்து கொண்டு நான் இப்படி படாதபாடு படுவதைவிட‌
என்னையும் ஆட்டு மந்தை ஆடாகவே மாற்றிவிடேன் இறைவா!
                                             - சத்யா
Enhanced by Zemanta

Wednesday, February 16, 2011

வேறொன்றும் வேண்டாம் எனக்கு ஒரு முறை உன்னோடு நடக்க வேண்டும்


















பிரிந்துபோன‌  பிரியமான‌ தோழிக்கு,

உன்னிடம் சொல்வதற்காக பதபடுத்திவைத்த நிகழ்வுகள் யாவும்
உன்னை சந்திக்கும் முன் பட்டுபோய்விடுமோ என்ற பயத்தில் எழுதும் கடிதம்.
அத்தனையும் இருந்தும் நிறைவாய் இல்லை நம் நாட்கள் போல் இந்நாட்கள்
உன்னுடன் ரசிக்கவும், உன்னுடன் சுவைக்கவும் சேமித்தவைகள் அனைத்தும்
நினைவுக‌ளை தாண்டி நம் பிரிவின் நீளத்தை உணர்த்துகிறது
பகிர்தல் நிமித்தம் இடம் பெறாமையால்
முழுமையடையாமலே முடிந்துவிடுகின்றன என் பொழுதுகள்
அலைபேசியில் உன் குரல் கேட்டு அழுத்துவிட்டது,
நிகழ்ந்ததுநினைத்தது, படித்தது, பார்த்தது, கேட்டது, ரசித்தது என‌
அத்தனையையும் அனுப்ப முடியவில்லை குறுந்செய்தியில்.
திறக்க படாத உன் மின்னஞ்சலில் பிரிக்கப்படாத
கடிதமாய் உறங்குவதிலும் விருப்பமில்லை எனக்கு.
வேறொன்றும் வேண்டாம் எனக்கு  ஒரு முறை உன்னோடு நடக்க வேண்டும் 
உலகின் ஒரு விளிம்பிலிருந்து வாழ்வின் மறு விளிம்பு வரை
எழுதிவைத்து செல்வேன் உயிலின் கடைசி வரியாய்
உன் அருகே புதைக்க வேண்டும் என்று
சொல்லி வை உன் குடும்பதினரிடம் உன்னை
எரித்து விட போகிறார்கள்
                  - சத்யா 
Enhanced by Zemanta