logo

g

Friday, May 6, 2011

எதற்காக இருக்ககூடும் என் நிறைவேறாத கனவுகள் ??











  
எதற்காக இருக்ககூடும் என் நிறைவேறாத கனவுகள்
என்று சலித்த‌ ஒரு நாளில் - உணர்ந்தேன்
நிஜமாகும் கனவுகள் யாவும்
கடந்து போய்விடும் கூடும்
என் கற்பணையை வறுமையாக்கி
வெறுமையை துணையாக்கி - பின்
கனவுகள் தேடி அழைவதைவிட சிறந்தது
கனவுகள் சுமந்து திரிவது - என்று!!
                                                                          - கனவுகளுடன்  
                                     சத்யா


Thursday, May 5, 2011

கடவுளும் பகுத்தறிவில்லாதவரோ!!


பாவத்தை கரைக்க வேண்டி கருப்பு பணமும்
செல்வத்தை சேர்க்க சொல்லி செல்லாத‌ பணமும்
தப்பிக்க வழி கேட்டு கள்ள நோட்டும்
குவிந்து வழிந்தது கோவில் உண்டியலில்
கணக்கு பார்க்க வந்த கடவுள்
கலக்கமுற்று நின்றார்
 








மனிதன் தன்னையும் பகுத்தறிவில்லாத குருடன் என்று நினைத்து விட்டானோ” 
                                   - சத்யா