logo

g

Monday, October 24, 2011

மனதை பாதுகாக்க பல நாட்கள் மரப்பாச்சியாய் வளம் வரவேண்டி இருந்த‌து















பெரிய மனுசியான உடனே
உணர்ந்துவிடவில்லை பெண்மையை
கொஞ்ச கொஞ்சமாக உணர்ந்து ரசித்த நாட்கள்
இன்னும் ஈரமாக நினைவில்
பெண்மையின் மென்மையிலும் தன்மையிலும்
கடவுளின் அருகாமையை உணர்ந்த‌தாய் ஞாபகம்
வெளிவிவரம் தலைக்கேறிய போது
சந்தோஷங்கள் யாவும் சங்கடங்களாய் உறுத்தியது.
மனதை பாதுகாக்க பல நாட்கள்
மரப்பாச்சியாய் வளம் வரவேண்டி இருந்த‌து
பேசி புழ‌ங்க வேண்டிய இடங்களில்
உணர்வுகளை மறைக்க‌ திமிர் காட்டி தப்பிக்க நேர்ந்தது
கள்ள பாராட்டுக்கள் தவிர்க்க
அலட்சியத்தை கற்க வேண்டியாதாயிற்று
ஆறுதல் என்னும் ஆயுதம் கொண்டு
சிறைபிடிக்க வருவோரிடம் கர்வம் காட்டி ஒளிய நேர்ந்தது.
இப்படி என்னையும் என் மனதையும் உனக்காக‌ பாதுகாக்கும் பொருட்டு தான்
என் பெண்மையின் மென்மையை இழக்க நேரிட்டது என்பதை எப்படி சொல்ல‌
என் பெண்மையின் வன்மை குறித்து கேலி செய்யும் உன்னிடம் - சத்யா