logo

g

Monday, August 8, 2011

பெயர் கேட்க ஆசை


கடைசிவரை பத்திரமாக‌
பாதுகாக்க ஆசைப்பட்டு
தொலைத்ததில் அதிமுக்கியமான ஒன்று
என் பெயர்
!
 
பிறந்தவுடன் சொந்தமாகும் முதல் அடையாளம்
உலகத்திடமிருந்து கிடைக்கும் முதல் அங்கீகாரம்

தேடி தேடி வைக்கப்பட்டாலும்
பெயர் என்னவோ
பேருக்குத்தான் வைக்கபடுகின்றன‌
.
 
குழந்தை பருவத்தில் கொஞ்சலிலும்
படிக்கும் பருவத்தில் எண்களிலும் - மறைந்து
நாளாவட்டத்தில் நட்பில் சுருங்கி
காலப்போக்கில் சுயமிழந்து
அக்கா, சித்தி, அத்தை, மேடம் என
வெறும் உறவு முறையின்
அடையாளமாகவே நின்றுவிடுகிறது

வங்கி சலானிலும்,  அடையாள அட்டையிலும்
எழுத்துக்களாய் மட்டுமே தேங்கி நிற்கும்
என் பெயரின் எனக்கான ஒலி கேட்டு நாளாயிற்று

சத்தமாக கூப்பிடும் சந்தர்ப்பம் கிடைத்தும் சிலர்
நாகரீகம் கருதி தவிர்த்துவிடுகின்றன‌

கனவுக்கு ஒலி இருக்குமாயின்
கனவிலாவது கேட்கலாம்

பெயர் சூட்டுகையில் சொல்வதை போல‌
நான் மரணத்துக்கு பயணப்ப‌டும் முன்
காதில் முன்று முறை என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்
இது நான் கேட்கும் இறுதி அங்கீகாரம் - சத்யா




1 comments:

Ungal thozhan.. said...

சத்யா
சத்யா
சத்யா
சத்யா
சத்யா
சத்யா
சத்யா
You are rocking!!

Post a Comment

அன்பான‌ வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..